/* */

களியனூர் ஊராட்சி பள்ளியில் "மாணவர் மனசு" புகார் பெட்டி அறிமுகம்

மாணவர்களின் குறை மற்றும் தேவைகள் குறித்து புகார் பெட்டி பள்ளி தலைமையாசிரியர் அறை அருகே வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

களியனூர் ஊராட்சி பள்ளியில் மாணவர் மனசு புகார் பெட்டி அறிமுகம்
X

களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு புகார் பெட்டி.

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகள் தோறும் மக்கள் மாணவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிய மாணவரின் மனசு எனும் தலைப்பில் புகார் பெட்டி தலைமை ஆசிரியர் அலுவலகம் அருகே வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 124 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த மாணவர் மனசு எனும் புகார் பெட்டி அமைத்து மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மோகன் காந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பதாகை ஒன்று அமைக்கப்பட்டு அதில் மாணவிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்த பட விளக்கங்களுடன் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர் மனசு புகார் பெட்டி மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றோருக்கு பெரும் நிம்மதியை தந்துள்ளது.

Updated On: 5 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...