Begin typing your search above and press return to search.
எரிந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின்மாற்றி நிறுவும் பணி தீவிரம்
கஞ்சிபுரம் அடுத்த சின்ன ஐயன்குளத்தில் நேற்று நள்ளிரவு எரிந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின் மாற்றி நிறுவும் பணியினை மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த சின்னையன் குளம் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் கசிவு ஏற்பட்டு திடீர் தீவிபத்தில் மின்மாற்றி மிகுந்த சேதம் அடைந்தது.
இதை கண்ட மக்கள் வீட்டிலிருந்து அச்சமடைந்து பாதுகாப்பாக வெளியேறினர். மேலும் மின்சாரம் அப்பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டு, தீ பரவாமல் பாதுகாக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியானதும் உடனடியாக மின்வாரியம் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சாரம் பழுது நீக்கி நண்பகல் மீண்டும் அப்பகுதி மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய பொறியாளர் தெரிவித்தார்.