காஞ்சிபுரம் மாவட்டத்தில் 272 பள்ளி வாகனங்கள் ஆய்வு: வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி அதிரடி
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் ஐவர் குழுவினர், 272 வாகனங்களை அதிரடியாக ஆய்வு செய்தனர்.
HIGHLIGHTS
.தமிழகத்தில் கடந்த 13ஆம் தேதி அனைத்து பள்ளி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 46 பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களை ஆண்டு தோறும் மாவட்ட போக்குவரத்து அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வது வழக்கம்.
இந்த ஆய்வில், பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசர வழி, வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவை சரியாக உள்ளதா? என ஆய்வு செய்து பள்ளி போக்குவரத்து வாகனத்திற்கு சான்றிதழ் அளிப்பார்கள்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 46 பள்ளிகளில் இயங்கி வரும் 272 வாகனங்களை தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆய்வு செய்தார். அவருக்கு ஆய்வு விதிமுறைகளை போக்குவரத்து அலுவலர் தினகரன் விளக்கி ஆய்வு மேற்கொண்டார். 5 பேர் கொண்ட குழுவினர் பள்ளி வாகனங்களை முறையாக ஆய்வு செய்து வாகன தணிக்கை சான்றிதழ் அளித்தனர்.
ஆய்வுக் குழுவில் வருவாய்த்துறை , பள்ளிக்கல்வித்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் அலுவலர்கள் , காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் இடம்பெற்று இருந்தனர்.