/* */

வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 13 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்
X

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் எண்ணும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளும் செயல் அலுவலர்கள் 

காஞ்சிபுரம் புகழ்பெற்ற அத்திவரதர் ஆலயம் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் உண்டியல் எண்ணும் பணி துவங்கி உள்ளது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேச தலங்களும், பரிகார தலங்களும் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் புகழ்பெற்ற அத்தி வரத திருக்கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் திருக்கோயில் வளாகத்தில் 10 உண்டிகளும், வெளி பிரகாரத்தில் மூன்று உண்டிகளும் என 13 உண்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதை எண்ணும் தனியார் ஆன்மீக குழு‌ ஊழியர்கள்.

மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று காலை 10 மணி அளவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி அறிவுரை பேரில், உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி வழிகாட்டுதல் பேரில் கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் , சுரேஷ் ஆய்வாளர் பூங்கொடி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு , 50க்கும் மேற்பட்ட பக்தர்களை கொண்டு எண்ணப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் எண்ணபட்ட நிலையில் அப்போது பக்தர்கள் காணிக்கையாக 29 லட்சம் செலுத்தி இருந்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட உள்ள ஊழியர்களுக்கு தேவையான குடிநீர் உணவு உள்ளிட்டவைகளை திருக்கோயில் ஊழியர்கள் அவ்வப்போது அளித்து வருகின்றனர்

மேலும் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் என்னும் காட்சிகளை பதிவு செய்ய வீடியோ கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 Sep 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்