/* */

பணம் நகைக்காக பெரியப்பாவுக்கு மதுவில் கொக்கு மருந்தை கலந்து கொடுத்து கொலை

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் வசித்து வந்த முதியவரை போன்ற விவகாரத்தில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சி காவல்துறைக்கு கைது செய்ய உதவியுள்ளது.

HIGHLIGHTS

பணம் நகைக்காக பெரியப்பாவுக்கு மதுவில் கொக்கு மருந்தை கலந்து கொடுத்து கொலை
X

முதியவரை கொலை செய்துவிட்டு பணம் நகை கொள்ளை அடித்த உறவினர் பாஷா என்கிற பாஸ்கரன்.

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (75). இவரது மகன் கிருஷ்ணன் கொத்தனாராக பணிபுரிந்து வரும் நிலையில் அவருடன் ஒரே வளாகத்தில் வசித்து வருகின்றனர்.

வழக்கம்போல் நேற்று கிருஷ்ணன் பணிக்கு சென்றிருந்த நிலையில், தமிழ் பகுதியில் வசித்து வரும் கோவிந்தனின் தம்பி மகன் பாட்ஷா என்ற பாஸ்கரன் நேற்று தனது பெரியப்பாவான கோவிந்தனை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு மதுபானம் அளித்து அருந்த செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த கோவிந்தனிடமிருந்து, அவரது வீட்டு சாவியை எடுத்து வீட்டினை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அறை பூட்டப்பட்டிருந்தால் அப் பூட்டினை உடைத்து பீரோவில் இருந்த 13 சவரன் நகை மற்றும் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.

பணி முடிந்து கிருஷ்ணன் வீடு திரும்பிய போது தந்தை மயக்கமுற்று நிலையில் இருந்ததை கண்டு வயது முதிர்வு காரணமாக இருந்து விட்டதாக காரியங்களை துவக்கி இருந்தார்.

இந்நிலையில் ஈமச்சடத்திற்கான தொழிலாளர்களுக்கு முன் பணம் அளிக்க அவரது அப்பா வீட்டு அறை திறக்க முயன்ற போது ஏற்கனவே பூட்டு உடைக்கப்பட்டு காட்சியளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அறையை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்ததும், தனது தந்தை பணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என ஒரு கோணத்தில் காவல்துறை உதவியினை நாடி உள்ளார்.

காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அவரது தந்தைக்கு கொடுத்த மதுவில் கொக்கு மருந்து சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அப்பகுதியில் உள்ள நபர்களிடம் விசாரிக்கும் போது, அவரது தம்பி மகன் பாட்ஷா வந்து சென்றதை தெரிவித்துள்ளார். மேலும் தலைமறைவாக இருந்த பாட்ஷாவை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இரவு கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் நகைக்காக தனது சொந்த பெரியப்பாவை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளியை கைது செய்ய காவல்துறைக்கு சிசிடிவி கேமரா அப்பகுதியில் பெரிதும் உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் தனி நபர் நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி காட்சி அமைக்க காவல்துறை வலியுறுத்தி வரும் நிலையில், சம்பவங்களுக்கு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய இது உதவியுள்ளது பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 7 April 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க