மஞ்சப்பை விழிப்புணர்வு : ஹத்மா தொண்டு நிறுவன கலைக்குழு அசத்தல்
காஞ்சிபுரம் மாநகராட்சி , பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக நகரங்களில் மக்கள் இயக்கம் நிகழ்ச்சி காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்கா வளாகத்தில் மேயர் மகாலட்சுமி துரை தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஆட்சியர் ஆர்த்தி , சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், துணை மேயர் குமரகுருநாதன், மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு, சுரேஷ், தேனம்பாக்கம் சங்கர், சசிகலா, மல்லிகா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஹத்மா தொண்டு நிறுவன கலைக்குழு சார்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த குறுநாடக வடிவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன்பின் 'என் நகரம் என் பெருமை' எனும் தலைப்பின் கீழ் தூய்மை உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். அதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவில் தூய்மை பணிகளை சமூக ஆர்வலர்களுடன் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சி நகர திமுக செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், நகர திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.