Begin typing your search above and press return to search.
ஜெயலலிதா பிறந்தநாளன்று அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
ஜெயலலிதா பிறந்தநாளன்று காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு அதிமுக சார்பில் தங்க மோதிரம் , புத்தாடை பரிசாக வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
மறைந்த முதல்வரும், அதிமுக நிரந்தர பொதுச்செயலாருமான ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், புத்தாடை, இனிப்புகளை மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் , அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் , மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து பரிசுகளை அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.