Begin typing your search above and press return to search.
78 ஆரணி பட்டுபுடவைகள் பறிமுதல்
காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற பறக்கும்படை வாகன சோதனையில், ஆரணியில் இருந்து அனுமதியின்றி எடுத்து வந்த 78 பட்டு சேலைகளை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
HIGHLIGHTS
தேர்தல் நன்னடத்தை விதிகளின் கீழ் பறக்கும் படையினர், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு சந்திப்பில் தோட்டக்கலை துறை அலுவலர் கோமதி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது ஆரணியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை சோதனையிட்டதில், முறையான ஆவணங்கள் இன்றி 78 ஆரணி பட்டு புடவைகளை எடுத்து வந்து தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு 46 ஆயிரத்து 800 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.