/* */

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
X

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் மாத கடைசி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறுவது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வந்திருந்தனர்.

இதில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது. இதேபோல் விவசாயிகளுக்கான கிஸான் அட்டை வழங்கப்பட்டது. இதன் பின் நடைபெற்ற கூட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள பிரச்சனைகள்‌, வருவாய்த்துறை பிரச்சினை, ஏரி மற்றும் நீர் நிலைகள் பரமாரிப்பு குறித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா, மாவட்ட ஆட்சியர் (வேளாண்துறை) நேர்முக உதவியாளர், முன்னோடி வங்கி மேலாளர், வேளாண் துறை இணை இயக்குனர், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலர்களும் விவசாயிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 April 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு