காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் மாத கடைசி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறுவது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வந்திருந்தனர்.
இதில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது. இதேபோல் விவசாயிகளுக்கான கிஸான் அட்டை வழங்கப்பட்டது. இதன் பின் நடைபெற்ற கூட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள பிரச்சனைகள், வருவாய்த்துறை பிரச்சினை, ஏரி மற்றும் நீர் நிலைகள் பரமாரிப்பு குறித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா, மாவட்ட ஆட்சியர் (வேளாண்துறை) நேர்முக உதவியாளர், முன்னோடி வங்கி மேலாளர், வேளாண் துறை இணை இயக்குனர், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலர்களும் விவசாயிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.