Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம்: மநீம சார்பில் பொறியியல் மாணவி வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரத்தில் வசிக்கும் பவித்ரா என்ற பொறியியல் மாணவி மக்கள் நீதி மய்யம் சார்பில் 27வது வார்டில் போட்டியிடுகிறார்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு அளித்தல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான இன்று காலை 10மணி முதல் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்தது.
அவ்வகையில் மக்கள் நீதி மையம் சார்பில் 27 வார்டு பகுதியில் போட்டியிட கல்லூரி இறுதியாண்டு கணினி அறிவியல் பயின்று வரும் மாணவி பவித்ரா(21) போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஊழலற்ற, வறுமை நீக்கும் வகையில் அப்பகுதிக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் அரசு நலத் திட்டங்களையும் பெற்றுத்தருவது நோக்கமாகக் கொண்டு தேர்தலில் களம் காணுவதாக தெரிவித்தார்