/* */

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில், ஆக்கிரமிப்பால், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி
X

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. 

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே சாலையில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சாலை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையால் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அரசு மருத்துவமனைக்கு வெளியே, நோயாளிகள் வரும் இரு சக்கர வாகனங்கள், அங்குள்ள ஆம்புலன்ஸ், கடைகள் போன்ற இடங்களில் நிறுத்துகின்றனர். வாகங்களின் இத்தகைய ஆக்கிரமிப்பால், சாலையின் பாதி இடம் ஆக்கிரமித்து சாலை குறுகலாகிவிடுகிறது. இதனால், சாலையில் செல்லும் பிற வாகனங்கள், பேருந்துகள் செல்ல இயலாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, இங்கு உள்ள தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் , கடைகள் என அனைத்தையும் அங்கிருந்து அகற்றி, அரசு மருத்துவமனைக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்த, காஞ்சிபுரம் மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 6 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு