காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில், ஆக்கிரமிப்பால், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே சாலையில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சாலை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையால் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அரசு மருத்துவமனைக்கு வெளியே, நோயாளிகள் வரும் இரு சக்கர வாகனங்கள், அங்குள்ள ஆம்புலன்ஸ், கடைகள் போன்ற இடங்களில் நிறுத்துகின்றனர். வாகங்களின் இத்தகைய ஆக்கிரமிப்பால், சாலையின் பாதி இடம் ஆக்கிரமித்து சாலை குறுகலாகிவிடுகிறது. இதனால், சாலையில் செல்லும் பிற வாகனங்கள், பேருந்துகள் செல்ல இயலாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, இங்கு உள்ள தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் , கடைகள் என அனைத்தையும் அங்கிருந்து அகற்றி, அரசு மருத்துவமனைக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்த, காஞ்சிபுரம் மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.