/* */

சாக்பீஸ் ஓவியத்தில் ஏகாம்பரநாத பிரமோற்ச விழா காட்சிகள்: அசத்தும் சகோதரர்கள்

காஞ்சிபுரம் ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிலவ வருட பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா நடைபெறுகிறது.

HIGHLIGHTS

சாக்பீஸ் ஓவியத்தில் ஏகாம்பரநாத பிரமோற்ச விழா காட்சிகள்: அசத்தும் சகோதரர்கள்
X

பிரமோற்சவ விழா குறித்த சாக்பீஸ் ஓவியங்கள்.

பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிலவ வருட பங்குனி உத்திர பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த பிரமோற்சவிழா குறித்து காஞ்சிபுரம் நகரை சேர்ந்த தினேஷ், டில்லி பாபு சகோதரர்கள் இருவர் தங்கள் ஓவிய திறமையினை விழா குறித்த தகவல்களை வரைந்து கோயில் உள் பிரகார நுழைவு வாயில் வைத்துள்ளனர். இதை காணும் பக்தர்கள் மற்றும் வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்து இணையதளங்களில் பதிவிடுகின்றனர்.

இதுமட்டுமில்லாமல் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளை முன்கூட்டியே பக்தர்கள் அறியும் வண்ணம் ஓவியமாக வைப்பதால் பக்தர்கள்‌ வருகை கூடும் நிலை உள்ளது.

மிக சிறந்த ஆன்மீக பக்தி கொண்ட இச்சகோதர்கள் காஞ்சிபுரத்திலுள்ள திருக்கோயில்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் பெற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்து குறைகளை களைகின்றனர். குறிப்பாக ஏகாம்பரநாதர் திருக்கோயில் சிலை முறைகேட்டை வெளிகொண்டு வந்ததில் இவர்கள் பங்கு சிறப்பானது.

Updated On: 12 March 2022 1:53 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்