காஞ்சிபுரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்
மூங்கில் மண்டபம்,காமராஜ் சாலைகளில் குடிநீர் குழாய் பழுதாகி குடிநீர் வெளியேறுவதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு குடிநீர் தேவையை பாலாறு மற்றும் திருபாற்கடல் ஆகியவை தீர்த்து வருகிறது. நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குறிப்பிடதக்கது.
கடந்த சில மாதங்களாக நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நகரின் குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என பதவியேற்புக்கு பின் தெரிவித்தார்.
கடந்த பல மாதங்களாக மூங்கில் மண்டபம் பச்சையப்பன் பள்ளி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதேபோல் மூங்கில் மண்டபம் மடம் தெரு சந்திப்பிலும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வெளியேறுகிறது.
நாள்தோறும் மாநகராட்சி அலுவலர்கள் அப்பகுதியை கடந்தாலும் இதுவரை இந்த உடைப்பினை சரி செய்யவில்லை. ஊரடங்கு காலத்தில் கூட இதைச் சரி செய்திருக்கலாம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் உடனடியாக மேயரின் கவனத்துக் கொண்டு சென்று பழுது நீக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது