தேசிகர் திருக்கோயில் தேரோட்ட விழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
காஞ்சிபுரம், தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நிகழ்வில் பல்வேறு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும், பரிகார தளங்களும் அமைந்துள்ளது . அவ்வகையில் காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசியம் திருக்கோயில் இக்கோயிலின் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது.
விழா தொடக்க நாள் முதலே காலை தேசிகர் தங்க பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 7 மணி அளவில் துவங்கியது. தேரில் தேசிக சுவாமிகள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி விளக்கடி கோயில் தெரு, ரங்கசாமி குளம், திருக்கச்சி நம்பி தெரு வழியாக வரதராஜ பெருமாள் கோயிலின் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வரதராஜ பெருமாள் திருக்கோயில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. வரும் 25ஆம் தேதி விளக்கொளி பெருமாள் மங்களா சாசனமும் , அந்நேரம் தேவராஜ் சுவாமி பெரிய தங்கப் பல்லக்கில் மங்களா சாசனத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் , இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவை காண ஏற்பாடுகளை செயல் அலுவலர் பூவழகி, ஸ்ரீ விளக்கொளி பெருமாள் வேதாந்த தேசிக அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.