/* */

காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி சாவு

காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி சாவு
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அவரச சிகிச்சை பிரிவு.

காஞ்சிபுரம் அருகே கூரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (38). இவர் காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகின்றார்.

பிரபு இன்று காலை கூரம் பகுதியில் காலை கடன் முடித்துவிட்டு அருகே இருந்த குளத்தில் கால் கழுவும் போது தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி குளத்திலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரபு குளம் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதை பார்த்த கூரம் பகுதி மக்கள் காவல் துறையினர்க்கு தகவல் தெரியபடுத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலுசெட்டி போலீசார் பிரபுவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரம் அருகே பூ வியாபாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 11 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...