/* */

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்: மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஆதரவாளர்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சி 44 வது வட்ட மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட விசுவநாதன் வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்

HIGHLIGHTS

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்: மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஆதரவாளர்கள்
X

நேரு நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்த மாமன்ற உறுப்பினர் விஸ்வநாதன்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் 44வது வட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட விசுவநாதன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெங்கடேசனை விட 913 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்று தனது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடுதோறும் இனிப்புகள் வழங்கி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பல இடங்களில் வாக்காளர்கள் சிரித்த முகத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தனது பகுதியில் உள்ள குறைகளை சரி செய்து தரவும் கோரிக்கை வைத்தனர். பதவி ஏற்ற பின் அந்தந்த பகுதிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தவாறு நன்றி தெரிவித்தார்.

இதில் வட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’