Begin typing your search above and press return to search.
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் 202பேருக்கு கொரோனா
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து, 72 நபர்கள் மட்டுமே பாதிப்படைந்துள்ளனர்.
HIGHLIGHTS
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் முந்தைய நாளைக்காட்டிலும் நேற்று கொரொனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, குன்றத்தூரில் 95 நபர்களும் , குன்றத்தூர் பேரூராட்சி பகுதியில் பத்து நபர்களும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல், மாங்காடு பேரூராட்சி 14 நபர்களும், ஸ்ரீபெரும்புதூரில் 69 நபர்களும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 14 பேர் என மொத்தம் 202 நபர்கள் மட்டுமே, நேற்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.