கொலை மிரட்டல் விடுத்த துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் மீது வழக்கு பதிவு
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேத்துப்பட்டு கிராமத்தில் வாலிபருக்கு கொலை விடுத்த துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சேத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் கேப்டன் பிரபாகரன். இவர் அதே பகுதியை சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டு விஷ்வா சுஜித் ஆகிய இரு குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு இவரது மனைவியின் பூர்வீக சொத்தினை அதே பகுதியை சேர்ந்த பூபதி , வாசு மற்றும் மேல் மதுரமங்கலத்தினை சேர்ந்த படப்பை குணா ஆகிய மூவரும் ஏமாற்றிப் பெற்றுக் கொண்டதாகவும் கடனை திருப்பி செலுத்தி விட்டாலும் தொடர்ந்து அவர் மீது அவதூறாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் சேத்துப்பட்டு பாலம் அருகே வந்தபோது வழி மடக்கி இந்தப் புத்தாண்டு தினத்துக்குள் தீர்த்துக்கட்டி விடுவதாக மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததால் சோமங்கலம் காவல் நிலையத்தில் கேப்டன் பிரபாகரன் புகார் மனு அளித்தார்.
அதனடிப்படையில் வழக்கு பதியப்பட்டு SC/ST சட்டப் பிரிவின் கீழ் மூன்று வழக்குகளும், IPC சட்டப் பிரிவின் கீழ் 4 வழக்குகளும் என ஏழு பிரிவுகளின் கீழ் தற்போது சேத்துப்பட்டு கிராம ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவரான வாசு மற்றும் வார்டு உறுப்பினரான பூபதி மற்றும் மதுர மங்கலத்தை சேர்ந்த படப்பை குணா ஆகியோர் 3 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.