/* */

காஞ்சிபுரம் : வளர்பிறை அஷ்டமி தினத்தையொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீ அஷ்ட காலபைரவருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது; மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : வளர்பிறை அஷ்டமி தினத்தையொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
X

ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் உள்ள கால பைரவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில், பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார்குழலி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில். இங்குள்ள கால பைரவருக்கு, வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில், இன்று மாலை 5 மணியளவில் ஸ்ரீ கால பைரவருக்கு அபிஷேகதூள், சந்தனம்,பால்,தயிர் மற்றும் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கால பைரவருக்கு வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ அலங்காரம், சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதால், இந்த நிகழ்வில் குறைந்த அளவே பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 14 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்