/* */

44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து  விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
X

 44ஆவது செஸ் ஒலிம்பியா குறித்த மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகள்.

தமிழகத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா வரும்28ந்தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இதனையொட்டி கல்லூரி , பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மாரத்தான் போட்டியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா , மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து பேருந்து நிலையம், காமராஜர் தெரு , மூங்கில் மண்டபம், மேட்டு தெரு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இப் போட்டி நடைபெற்றது.இதில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளது.

ஆண்கள் பிரிவில் முதலிடத்தை சவீதா கல்லூரி மாணவர் கோகுல் சீனிவாசன் இரண்டாவது , மூன்றாவது இடத்தை அருண் மற்றும் ஸ்ரீதர் வெற்றி பெற்றனர்.பெண்கள் பிரிவில் பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த காவியா இரண்டாம் இடத்தை எஸ் எஸ் கே வி பள்ளி மாணவி அர்ச்சனா, மூன்றாம் இடத்தை ராணி அண்ணாதுரை மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா ஆகியோர் பிடித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த் மற்றும் பள்ளி கல்லூரி விளையாட்டு துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 13 July 2022 8:36 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  2. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  4. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  6. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  7. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  8. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  9. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  10. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி