Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் மாநகராட்சி : 93 வேட்பாளர்கள் வாபஸ்
காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 407 வேட்பாளர்களில் 93 பேர் வாபஸ் பெற்றனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரு மாநகராட்சி நகராட்சிகளில் 3 பேரூராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு கடந்த வாரம் அனைத்து கட்சியினர் மற்றும் சுயேச்சைகளால் 409 மனுதாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 2 மனுக்கள் பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வேட்புமனு மாலை 3மணி வரை வாபஸ் பெறலாம் என இருந்த நிலையில் அரசியல் கட்சியின் மாற்று வேட்பாளர்கள், சில சுயேச்சைகள் என இறுதியாக 93 நபர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.
இறுதியாக ஐம்பத்தொரு வார்டு பதவிகளுக்கு 314 நபர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.