/* */

காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் தங்க நகை கொள்ளை

காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை, ரூபாய் 10,000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் தங்க நகை கொள்ளை
X

திருடுபோன தனியார் தொழிற்சாலை ஊழியரின் வீடு மற்றும் வீட்டினில் சிதறிக்கிடந்த பொருட்கள்

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு - ஓரிக்கை சாலையில் அமைந்துள்ளது வடிவேல் நகர். இந்நகரில் அசோக்குமார் என்பவர் தனது மனைவி சுபா உடன் வசித்து வருகிறார்.

பணி காரணமாக திருவண்ணாமலையில் தங்கி இருந்து வாரம் ஒரு முறை அசோக்குமார் இங்கு வருவது வழக்கம். அதேபோல் அவரது மனைவி ஒரகடம் பகுதியில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஒரு மாதம் முன்பு இவர்களது குழந்தைக்கு காதணி விழா நடைபெற்ற போது அன்பளிப்பாக தங்க மோதிரம் உறவினர்களால் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்று மதியம் வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த அறையில் இருந்த பீரோ கட்டில் உள்ளிட்ட பகுதிகளில் பொருட்கள் சிதறி கிடந்தன.

இதை அடுத்து பீரோவை சோதனை செய்தபோது அதில் இருந்த சரடு , வலையல், கம்மல் உள்ளிட்ட 22 சவரன் நகை, ரொக்கம் ரூபாய் பத்தாயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து காஞ்சி தாலுக்கா காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் காவல்துறை கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 சிசிடிவி கேமராக்களும் கடந்தவாரம் பொழுது பார்க்கும்போது அதில் கேமரா பதிவை நிறுத்தி வைத்து உள்ளதால் வந்த நபர் குறித்த பதிவுகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்