காஞ்சிபுரத்தில் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி துவக்கம்
காஞ்சிபுரத்தில் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருப்பருத்திகுன்றம் - கீழ்கதிர்பூர் சாலை மிக குறுகலான சாலையாக உள்ளதால் அதிக விபத்துகள் இச்சாலையில் நடைபெறுகிறது.
இச்சாலையை யொட்டி அதிகளவில் குடியிருப்பு பகுதிகள் அமைந்து வருவதும் , கீழம்பி புறவழி சாலை இணைக்கும் வகையில் இச்சாலை இருப்பதால் இரு வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை எழுந்தது.
அத்தி வரதர் திருவிழாவின்போது இச்சாலை அதிகளவில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தியதால் நகரினில் பெருமளவு வாகன நெரிசல் தவிர்க்க பட்டதால் இதைக் கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இச் சாலையை அகலப்படுத்திட நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்
அதன் அடிப்படையில் ரூபாய் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் இச்சாலை இருவழி சாலையாக மாற்ற பணிகள் இன்று துவங்கப்பட்டது.
துவக்க விழாவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார், மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன், தி.மு.க. ஒன்றிய பொருளாளர் தசரதன் , ஒன்றியக் குழு உறுப்பினர் பிரசாத் , ஊராட்சி மன்ற தலைவர் மலர்ராமசந்திரன் , நெடுஞ்சாலைதுறை ஊழியர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பணிகளை துவக்கினர்.
சாலை விரிவாக்கத்தால் விபத்து குறைப்பு , நகரில் வாகன நெரிசல் தவிர்ப்பு, பல மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் இணைக்கப்படும் என்பதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.