உத்தரமேரூர் : 13 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 13 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சொர்ணாவாரி பருவத்தில் பல ஆயிரம் கணக்கில் பயிரிடப்பட்டு கடந்த மாதம் முதல் நெல் அறுவடை துவங்கியுள்ளது.
நெல் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்க விவசாயிகள் ஆர்வம் கொண்டு விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வட்டத்தில் மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்திருந்தார்.
அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 13 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி செல்வம் ஆகியோர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து வருகின்றனர்
நேற்று உத்திரமேரூர் பகுதியில் மருதம், திருப்புலிவனம், வேடபாளையம், இளநகர் உள்ளிட்ட எட்டு இடங்களிலும், இன்று வாலாஜாபாத் பகுதியில் நத்தாநல்லூர், கட்டவாக்கம், தென்னேரி, திருவாங்கரணை, மதுரா நல்லூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், திமுக நிர்வாகி பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் பொதுமக்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்