Begin typing your search above and press return to search.
அரசு ஊழியர்கள் 9 வது நாளாக சாலை மறியல்
காஞ்சிபுரத்தில் அரசு ஊழியர்கள் 9 வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 2ம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல்,சத்துணவு, அங்கன்வாடி,கிராமஉதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வேலை செய்வோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட , காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 9வது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர் . சாலை மறியலில் ஈடுபட்டவர்களை விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.