/* */

சங்கராபுரம் அருகே இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

சங்கராபுரம் அருகே கருக்கலைப்பு செய்து பெண் இறந்த வழக்கில் இருவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்து பெண் இறந்த வழக்கில் இருவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடந்த 22ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுக்கா, கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வி க/பெ சின்னத்தம்பி என்பவருக்கு அதே ஊரில் உள்ள மெடிக்கலில் கருக்கலைப்பு செய்த போது அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டு இறந்து விட்டார். இந்த வழக்கில் மெடிக்கல் கடையின் உரிமையாளர் முத்துகுமாரி க/பெ மணிகண்டன் கீழ்பாடி கிராமம் மற்றும் கவிதா க/பெ அருண்குமார் அ.பாண்டலம் கிராமம் ஆகிய இருவரும் இரிஷிவந்தியம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவர்கள் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இருவரும் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 22 March 2022 3:23 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...