/* */

ரிஷிவந்தியத்தில் தர்பூசணி, முலாம் பழங்கள் விற்பனை ஆகாமல் வீணாகி வருகின்றன.

ரிஷிவந்தியம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி, முலாம் பழங்கள், ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி செய்ய முடியாமல் வீணாகி வருகின்றன.

HIGHLIGHTS

ரிஷிவந்தியத்தில் தர்பூசணி, முலாம் பழங்கள் விற்பனை ஆகாமல் வீணாகி வருகின்றன.
X

ரிஷிவந்தியம் பகுதியில் மண்டகபாடி, பெரியபகண்டை, எகால் ஆகிய கிராமங்களில் தர்பூசணி மற்றும் முலாம் பழம் பயிரிடப்பட்டுள்ளது. இவை அறுவடையானதும் வெளிமாவட்டத்தில் உள்ள பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், புரோக்கர்கள் மூலம் உள்ளூர் கடைகளுக்கும் கொண்டு செல்லப்படும்.

ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடங்கி, பழச்சாறு தயாரிப்பு நிறுவனங்களும், உள்ளூர் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

இதனால் விளைநிலத்திலேயே பழங்கள் அழுகி வீணாகி, கால்நடைக்கு உணவாக அளிக்கப்படுகிறது. ஊரடங்கிற்கு முன் ஒரு கிலோ முலாம், தர்பூசணி 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது நஷ்டத்திற்கு 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும் மக்கள் வாங்க முன்வராததால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 30 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !