கள்ளக்குறிச்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு செயல்விளக்க ஒத்திகை
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை குறித்து செயல்விளக்க ஒத்திகை ஆட்சியர் ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பாக வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் எதிர்கொள்ள தேவையான முன்னோற்பாடு பணிகள் தொடர்பான செயல்விளக்க ஒத்திகை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதனால் நீர் நிலங்கள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருவதனால் பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இப்பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் மீட்கும் பொருட்டு பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து தமிழ்நாடு தியணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
இம்மீட்பு பணிகளின் போது பயன்படுத்தப்படவுள்ள பவர் ஷா, கலைப் ஜாக்கெட், மூச்சுக் கருளி, அலுமினரிய சூட்டு, மைவாட்ராவிக் டோர் ஒப்பனர், போஸ்ட் கட்டர், ஊஹாங்கி கள்ளா பம்ப் ஆகிய சிறப்பு தளவாடங்களை கொண்டு செயல்விளக்க ஒத்திகை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகளில் மீட்பு பணியில் ஈடுபடவுள்ள தீயணைப்பு துறையைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாார்கள் எப்போதும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மாவட்டத்தில் எங்கு பேரிடர் ஏற்பட்டாலும் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இச்செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை அலுவலர் சரவணன், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஷ்வரர், தியாகதுருகம் தியணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் மற்றும் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை தீயணைப்பு ஊர்தி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.