/* */

சங்கராபுரம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து: 9 பேர் படுகாயம்

சங்கராபுரம் அருகே அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து: 9 பேர் படுகாயம்
X

பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப்பேருந்து.

சங்கராபுரம் அடுத்த சு.குளத்தூர் பிரிவு சாலை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை வழியாக கள்ளக்குறிச்சிக்கு 9 பயணிகளுடன் டி.என்.21.என் 1316 என்ற பதிவெண் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

பேருந்தை சோழம்பட்டு கிராமம் முத்து மகன் வீரன் ஓட்டி வந்தார். இரவு சங்கராபுரம் - திருவண்ணாமலை சாலையில் சு.குளத்துார் பிரிவு சாலை அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி இடது பக்கத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 9 பேரும் காயமடைந்தனர்.

அனைவரும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Updated On: 11 Feb 2022 2:25 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு