Begin typing your search above and press return to search.
சங்கராபுரம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து: 9 பேர் படுகாயம்
சங்கராபுரம் அருகே அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
HIGHLIGHTS
சங்கராபுரம் அடுத்த சு.குளத்தூர் பிரிவு சாலை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை வழியாக கள்ளக்குறிச்சிக்கு 9 பயணிகளுடன் டி.என்.21.என் 1316 என்ற பதிவெண் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
பேருந்தை சோழம்பட்டு கிராமம் முத்து மகன் வீரன் ஓட்டி வந்தார். இரவு சங்கராபுரம் - திருவண்ணாமலை சாலையில் சு.குளத்துார் பிரிவு சாலை அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி இடது பக்கத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 9 பேரும் காயமடைந்தனர்.
அனைவரும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.