/* */

நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்: இளைஞர்களுக்கு எஸ்.பி., வேண்டுகோள்

சிறுவர்கள், இளைஞர்கள் நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்: இளைஞர்களுக்கு எஸ்.பி., வேண்டுகோள்
X

கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்நிலைகளுக்குச் சென்று சிறுவர்கள், இளைஞர்கள் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்' என எஸ்.பி., ஜியாவுல்ஹக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதையொட்டி பெரும்பாலான சிறுவர்கள், இளைஞர்கள் நீர்நிலைகளுக்கு சென்று குளிக்கின்றனர். அப்போது நீரில் மூழ்கி உயிரிழப்பு போன்ற அசாம்பாவிதங்கள் ஏற்படுகிறது. எனவே, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் நீர்நிலைகளுக்குச் சென்று குளிப்பதை பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது.

விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருந்தாலும் நீர்நிலைகளுக்குச் சென்று குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் சுழல் உள்ள இடம், புதை மணல், சகதி நிறைந்த இடம், மற்றும் ஆழமான பகுதிகளின் தன்மை அறியாமல் குளிப்பதோ, டைவ் அடிப்பதோ கூடாது.

குறிப்பாக குடிபோதையில் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்வதைத் தவிர்க்க வேண்டும்.உயிர் பாதுகாப்பு முதலுதவி முறையினை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி., உத்தரவைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Updated On: 8 Nov 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்