/* */

பழனியில் பலத்த காற்று:ரோப் கார் சேவை நிறுத்தம்

Palani Rope Car Service Stopped மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் பழனிமலைக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பழனியில் பலத்த காற்று:ரோப் கார் சேவை நிறுத்தம்
X

பலத்த காற்று ,பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Palani Rope Car Service Stopped

தமிழகத்தில் இந்த ஆண்டைப்பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையினால் பெருத்த பாதிப்புகளை பொதுமக்கள் சந்தித்து வந்துள்ளனர். சென்னை புயல் மழையால் பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி பல நாட்களுக்கு பின் தானாக வடிந்தது. அதற்கு பிறகு பல நாட்கள் கழித்து தென்மாவட்டங்களில் கனமழை பெய்ததால் நான்கு மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களுடைய உடைமைகள் அனைத்தும் வீணாகிப்போனது. இந்நிலையில் பழனியில் பலத்த காற்று வீசியதால் ரோப்கார் சேவையானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பகல் பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இரவில் ,கடுமையான பனிப்பொழிவும், அதிகாலை குளிர்ந்த காற்று வீசுகிறது.

அத்துடன் பகல் நேரங்களில் பலத்த காற்று வீசுவதால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், பழனியில் பலத்த காற்றால் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இழுவை ரயில், மூலம் பயணமும்,யானை பாதை வழியாகவும் நடந்து சென்றனர். மேலும், பழனி சண்முக நதியில் நீர் அதிகமாக செல்கிறது.

அத்துடன் , மதுரை வைகை நதியில் பகுதிகளிலும், நீரானது அதிகமாக செல்கிறது.இதனால், மதுரை மாவட்டத்தில் பல கண்மாய்களுக்கு நீர்வரத்து பெருகி உள்ளது.இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் லேசான மழை பெய்தது.தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசுவதால், காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய் தொற்றால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

Updated On: 13 Jan 2024 12:52 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...