Begin typing your search above and press return to search.
நத்தம் கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி: துணை இயக்குநர் ஆய்வு
நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை துணை இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி- துணை இயக்குநர் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வீடு, வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி இன்று மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன் சிரங்காட்டுபட்டி மற்றும் செந்துறை ஊராட்சிகளில் வீடு, வீடாக தடுப்பூசி போடும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா, சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுகாதாரதுறையினர் ஆய்வின் போது உடனிருந்தனர்.