Begin typing your search above and press return to search.
திண்டுக்கல்: விதிகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் பறிமுதல்
திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் வாகன சோதனை நடத்தினர்
HIGHLIGHTS
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் பறிமுதல்
வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, செல்வம், ஸ்ரீதர், ஈஸ்வரன், சண்முகானந்தம், மோகனப்பிரியா ஆகியோர் வாகன சோதனையில் இறங்கினர். அதன்படி திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது சாலை விதிகளை மீறி அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் சிக்கின. இதையடுத்து அந்த 12 ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.