Begin typing your search above and press return to search.
வெளிநாட்டில் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: வெளிநாட்டு வாலிபர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 4 லட்சம் நூதன மோசடி செய்த வெளிநாட்டு வாலிபர் கைது.
HIGHLIGHTS
திண்டுக்கல் பள்ளப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவரிடம் முகநூலில் பழகிய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த உச்சனா(35) என்பவர் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 4 லட்சம் மோசடி செய்ததாக கடந்த மாதம் புகார் அளிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்படி சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு உச்சனாவை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கைது செய்தனர்.
பின்னர் திண்டுக்கல் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.