/* */

கோட்டை மாரியம்மன் கோவில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை: திரளான மகளிர் வழிபாடு

திண்டுக்கல் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை சேர்ந்த பெண்கள் திரவியங்களைக் கொண்டு வந்து 1008 நாமாவளி போற்றிகள் நடத்தினர்

HIGHLIGHTS

கோட்டை மாரியம்மன் கோவில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை: திரளான மகளிர் வழிபாடு
X

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மார்கழி மாத விலக்கு வழிபாடு நிறைவு ஏராளமான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

திண்டுக்கல் மலையடிவார உலகப் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மார்கழி மாதம் முதல் நாள் முதல் கோவில் பிரகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் விளக்கு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 30 நாட்களும் 4:30 மணியிலிருந்து திருவிளக்கு பூஜை ஆரம்பிக்கப்பட்டு 1008 நாமங்கள் சொல்லி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதன் நிறைவு நாளான நேற்று திண்டுக்கல் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை சேர்ந்த பெண்கள் திரவியங்களைக் கொண்டு வந்து அதற்கு 1008 நாமாவளி போற்றிகள் சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் மஞ்சள் குங்குமம் மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கி நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்கள் குடும்பம் சுபிட்சம் பெறவும் ,தாலிபாக்கியம் நிலைத்து நிற்கவும், விளக்கு வழிபாட்டில் கலந்துகொண்டு மாரியம்மனை வழிபாடு செய்தனர்.

Updated On: 13 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  2. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  3. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  4. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  5. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  6. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...