Begin typing your search above and press return to search.
திண்டுக்கல்: வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி- போராடிமீட்ட தீயணைப்பு வீரர்!
திண்டுக்கல்லில் இடிந்து விழுந்த வீட்டில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்பு வீரர் போராடி மீட்டுள்ளார்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் மாலை நேரங்களில் மூன்று மணி நேரம் வரை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் பூதிப்புரம் பகுதியை சேர்ந்தவர் 82 வயதான தாமரை என்ற மூதாட்டி வசித்து வந்த வீடு இன்று மழை காரணமாக இடிந்து விழுந்தது. இடிந்த வீட்டிற்குள் மூதாட்டி மாற்றிக்கொண்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழுவினர், சுமார் ஒருமணி நேரம் போராடி, மூதாட்டியை உயிருடன் மீட்டனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.