/* */

விநாயகர் சிலை ஊர்வலம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதிகோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

விநாயகர் சிலை ஊர்வலம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
X

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் கோவில் குளங்கள், வீதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா பேசியதாவது:

அனைத்து விழாக்களும் பிற மதத்தினர் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்குகிறார்கள். ஆனால் இந்து மத விழாவின் முக்கிய விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா உள்ளது. இந்த விழாவுக்கு ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது இந்து மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதுகிறோம்.

கோவில்களை திறந்தால் தான் மக்கள் மனநிலை நன்றாக இருக்கும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை நடத்தினால் மட்டும் தான் மதநல்லிணக்கம் வளரும். மாநில அரசு இதற்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இந்து மக்கள் கட்சி தொடர் போராட்டங்கள் நடத்தும். தடையை மீறுவும் தயங்கமாட்டோம். இவ்வாறு பேசினார்.

Updated On: 6 Sep 2021 10:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  6. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  10. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு