/* */

திண்டுக்கல்லில் அரசு அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் அரசு அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
X

திண்டுக்கல்லில் நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமை வகித்தார். பிரதமர் நரேந்திமோடியின், தூய்மை இந்தியா திட்ட பணிகளில் பரப்புரையாளர்கள் நியமிப்பதில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்தும், ஏற்கனவே பணி செய்த பணியாளர்களை நீக்கம் செய்து விட்டு புதிய நபர்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமிக்கும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்தும், மூன்று மாதமாக வழங்காத சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Updated On: 2 Sep 2021 8:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  3. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  4. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  6. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  7. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  8. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  9. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்