/* */

அரசு ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்

அரசு ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்
X

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் திண்டுக்கல்லில் 3ம் நாளாக தொடர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் ராஜதுரை தலைமையில்,சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவை தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட பணப்பயன்களை வழங்க வேண்டும்.ஆதிசேஷன் மாநில பணியாளர் சீரமைப்புப் பணிகள் பாதியிலேயே ரத்து செய்ய வேண்டும், ஒருங்கிணைந்த நிதி, மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப் 4 ம் தேதி) தொடர்ந்து 3வது நாளாக சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் என 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து பேருந்து நிலைய சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 4 Feb 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?