/* */

மொச்சை அறுவடை மும்முரம்.

செம்பட்டி பகுதியில் மொச்சை அறுவடை மும்முரம்.

HIGHLIGHTS

மொச்சை அறுவடை மும்முரம்.
X

செம்பட்டி பகுதியில் மொச்சையை அறுவடை செய்து, தரம் பிரிக்கும் விவசாயி

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரசிக்கம்பட்டி, கோடாங்கிபட்டி, போடிகாமன்வாடி பகுதிகளில் விவசாயிகள், தென்னை மரத்தின் ஊடு பயிராக சிவப்பு மொச்சை பயிரிட்டிருந்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து விதையை வாங்கி பயிரிட்ட மொச்சை நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. இளஞ்சிவப்பு கலரில் இருக்கும் மொச்சை பயிரை பொதுமக்கள் விரும்பி உண்ணுவர்.

தற்போது இவற்றை அறுவடை செய்து, தரம் பிரித்து விற்பனைக்காக மார்க்கெட்டிற்கு அனுப்பி வருகின்றனர். ஒரு கிலோ உலர்ந்த மொச்சை ரூ.50 வரை விற்கப்படுகிறது.இதுகுறித்து வீரசிக்கம்பட்டியை சேர்ந்த சவடமுத்து கூறுகையில், 'ஆண்டிபட்டியில் இருந்து மொச்சை விதையை வாங்கி பயிரிட்டிருந்தோம். அவை தற்போது நன்கு வளர்ந்து காய்த்து குலுங்கியதால் அவற்றை பறித்து மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கிறோம். போதிய விலை கிடைப்பதால் மகிழ்ச்சியே' என்றார்....

Updated On: 15 May 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’