/* */

விருத்தாசலம் சாலையில் தேங்கிய மழைநீர்: நாம் தமிழர் கட்சியினர் நூதன போராட்டம்

தேங்கி நிற்கும் நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் நூதன போராட்டம்

HIGHLIGHTS

விருத்தாசலம் சாலையில் தேங்கிய மழைநீர்: நாம் தமிழர் கட்சியினர் நூதன போராட்டம்
X

விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பங்களா தெருவில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையில் தற்போது பெய்த கன மழையில் குளம் போல் தேங்கியுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாலையில் தேங்கி நிற்கும் நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமை தாங்கினார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், கிழக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை விஜய் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் தொட்டிக்குப்பம் கிளை பொறுப்பாளர் கவிஞர் விக்னேஷ் சரவணன், செல்வம் மோகன், ஆதி, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Oct 2021 9:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்