/* */

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அபாய நிலையில் பாலம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாலம் அபாய நிலையில் இருப்பதால் புதிய பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அபாய நிலையில் பாலம்
X

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பாலம்

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், வலசக்காடு கிராமத்திலிருந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் முக்குட்டி கரை பகுதியில் ஒரு பாலம் உள்ளது.

பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் வலசக்காடு, பேரூர் மதுரா மேட்டுக்குப்பம் சுற்றியுள்ள மாணவ மாணவிகள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமத்தினர், விவசாயிகள் அனைவரும் இந்தப் பாதையை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த பாலம் கனமழை பெய்த காரணத்தினால் மண் அரித்து பாலத்தின் ஒரு பகுதி எந்தவித பிடிப்பும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகின்றது. இந்தப் பாலம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இந்தப் பாலம் உடைந்தால் இப்பகுதி மக்கள், மாணவ/ மாணவிகள் அனைவரும் பண்ணை வேலி வழியாக சோழதரம் மெயின் ரோடு சென்று பாளையங்கோட்டை செல்லவேண்டிய நிலை ஏற்படும். இதனால் கூடுதலாக ஆறு கிலோமீட்டர் தூரம் பயணம் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்காலிக பாதை அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 30 Sep 2021 4:57 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  2. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  4. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  6. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  7. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  8. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  9. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  10. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...