Begin typing your search above and press return to search.
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா
விருத்தாசலத்தில் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிபூர உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள அருள்மிகு விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கடந்த 2ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 11ஆம் நாள் திருவிழாவான அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 9ஆம் நாள் திருவிழாவான இன்று அம்மன் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தற்போது கொரோனா காலம் என்பதால் அரசு நடவடிக்கையை பின்பற்றி கோவில் வளாகத்திலேயே அம்மன் தேரானது உலா வந்தது குறிப்பிடத்தக்கது.