/* */

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

HIGHLIGHTS

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
X

ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மகிமை தாஸ் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் இளம்கம்பூரைச் சேர்ந்தவர் பீட்டர்அபிஷேகநாதன் மகன் மகிமைதாஸ் (21). கடந்த 27-3-2019 அன்று அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்குச் சென்றவர் அங்கு மாடு ஓட்டிச் செல்வதற்காக வந்திருந்த 6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திட முயற்சித்துள்ளார். இதனை, அங்கிருந்த மற்றொருவர் பார்த்து சிறுமியை மீட்டுள்ளார். இதுகுறித்து, சிறுமி தரப்பில் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எஸ்.எழிலரசி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திட முயன்ற குற்றத்திற்காக மகிமைதாஸிற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையும் விதித்தார்.

Updated On: 28 Sep 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து