/* */

நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலை சீரமைப்பு, குளங்கள் தூர்வாரும் பணி

நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலைகள் சீரமைப்பு மற்றும் குளங்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலை சீரமைப்பு, குளங்கள் தூர்வாரும் பணி
X

செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் மண்டல செயற் பொறியாளர் கருப்பையா ராஜா  நெல்லிக்குப்பம் நகராட்சியில் குளங்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

நெல்லிக்குப்பம் நகராட்சி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் குண்டும், குழியுமான சாலைகள் சீரமைப்பு மற்றும் குளங்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது‌. இதை நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தார்

இந்த நிலையில் செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் மண்டல செயற் பொறியாளர் கருப்பையா ராஜா திடீரென நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெறும் சாலை சீரமைப்பு மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, பொறியாளர் பாண்டு, பணி மேற்பார்வையாளர் வாசு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 21 March 2022 5:37 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...