/* */

நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலை சீரமைப்பு, குளங்கள் தூர்வாரும் பணி

நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலைகள் சீரமைப்பு மற்றும் குளங்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலை சீரமைப்பு, குளங்கள் தூர்வாரும் பணி
X

செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் மண்டல செயற் பொறியாளர் கருப்பையா ராஜா  நெல்லிக்குப்பம் நகராட்சியில் குளங்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

நெல்லிக்குப்பம் நகராட்சி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் குண்டும், குழியுமான சாலைகள் சீரமைப்பு மற்றும் குளங்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது‌. இதை நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தார்

இந்த நிலையில் செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் மண்டல செயற் பொறியாளர் கருப்பையா ராஜா திடீரென நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெறும் சாலை சீரமைப்பு மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, பொறியாளர் பாண்டு, பணி மேற்பார்வையாளர் வாசு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 21 March 2022 5:37 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?