/* */

கடலூரில் குடியிருப்பு பகுதியில் பிடிபட்டது 8 அடி நீள முதலை

கடலூர் வெள்ளக்கரை பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் வந்த சுமார் 8 அடி நீள முதலை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கடலூரில் குடியிருப்பு  பகுதியில் பிடிபட்டது 8 அடி நீள முதலை
X

கடலூரில் ஊருக்குள் வந்த 8 அடி நீள முதலையை பொதுமக்கள் பிடித்தனர்.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையினால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் அருகே வெள்ளக்கரை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முதலை ஒன்று இருந்ததைக் கண்டு அப்பகுதியினர் அச்சமடைந்தனர். இதுபற்றிய தகவல் கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் குவியத்தொடங்கினர்.

பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து தகவலறிந்த வனத்துறையினர், விலங்கு நல ஆர்வலர் செல்லா ஆகியோர் அங்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி 8அடி நீளம் கொண்ட முதலையை லாவகமாக பிடித்தனர்.

இதனையடுத்து வனத்துறை ரேஞ்சர் அமீத் மற்றும் விலங்கு நல ஆர்வலர் செல்லா பிடிபட்ட முதலையை சிதம்பரம் பகுதிக்குட்பட்ட நீரில் விட்டனர்.10 கி.மீ. சுற்றளவுக்கு ஆறுகள் இல்லாத நிலையில் 8 அடி நீள முதலை எப்படி வந்தது என அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்

Updated On: 3 Dec 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  2. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  3. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  4. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  5. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  6. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  9. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்