/* */

கடலூரில் போக்குவரத்து காவலர்களுக்கு தாெப்பி, குளிர்பானம் வழங்கல்

கடலூரில் போக்குவரத்து காவல் துறையினருக்கு வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள பிரத்தியேக தொப்பி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கடலூரில் போக்குவரத்து காவலர்களுக்கு தாெப்பி, குளிர்பானம் வழங்கல்
X

கடலூரில் போக்குவரத்து காவலர்களுக்கு பிரத்யேக தொப்பி மற்றும் குளிர்பானங்களை துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் வழங்கினார். 

வெயில் காலங்களில் அதிக நேரம் வெயிலில் நின்று பணியாற்றுபவர்களுக்கு அதன் தாக்கத்தால் உடலின் இயல்பான வெப்பநிலை உயர்ந்து நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக வெயில் நேரங்களில் போக்குவரத்தை சரி செய்யும் போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து வெயிலில் நின்று பணியாற்றுவதால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கின்றனர்.

இதனை தடுக்கும் பொருட்டு கடலூர் நகர போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் காவல்துறையினருக்கு வெயிலில் இருந்து தலையைப் பாதுகாக்க பிரத்யேக தொப்பி மற்றும் குளிர்பானங்களை கடலூர் துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 March 2022 1:31 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  5. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  6. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  7. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  8. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  9. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  10. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!