/* */

நாளை மெகா தடுப்பூசி முகாம்- கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் நாளை அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

HIGHLIGHTS

நாளை மெகா தடுப்பூசி முகாம்- கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
X

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம்

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் பேசியதாவது-

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ௭ மணி முதல் மாலை ௭ மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள், அரசு கல்லூரி மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 11 Sep 2021 2:24 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!