கடலூரில் 39 நொடிகளில் 108 ஓடுகளை உடைத்து கராத்தே மாணவர் சாதனை
கடலூரில் 108 ஓடுகளை 39 நொடிகளில் உடைத்த கல்லூரி மாணவரின் சாதனையை நோபல் புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு பாராட்டி யது.
HIGHLIGHTS
கடலூர் அடுத்த கோண்டூர் பெண்ணை நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். 21 வயதான இவர் எம்.டெக் படித்து வருகிறார்.கடலூர் வெளிச்செம்மண்டலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கராத்தே பள்ளியில் கராத்தே பயின்று வருகிறார்.மாணவர் கார்த்திக் குத்துச்சண்டை,கராத்தே போட்டிகள் என பல்வேறு சாதனை படைத்துள்ளார்.
இந்தநிலையில் இன்று மேலும் ஒரு சாதனை படைக்கும் விதமாக 108 ஓடுகளை தனது கட்டை விரலால் 39 நொடியில் உடைத்து சாதனை செய்தார்.இதனையடுத்து சாதனை புரிந்த மாணவருக்கு கடலூர் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் குருமூர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவரின் இந்த சாதனையை பாராட்டி நோபல் புக் ஆப் ரெக்கார்ட் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினர். இந்த சாதனை நிகழ்த்திய போது மாணவர் கார்த்திக் கட்டைவிரல் சேதமடைந்து ரத்தம் வெளியேறிய போதும் இந்த சாதனையை அவர் செய்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .